மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை 19.06.2018 உளநலப் பாதிப்புக்குள்ளான இளைஞர் ஒருவரின் சடலத்தை மீட்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயித்தியமலை கிராமத்தைச் சேர்ந்த நடராசா ஸ்ரீசங்கர் (வயது 20) என்பவரின் சடலமே அவர் வாழ்ந்த வீட்டின் வழிபாட்டு அறையிலிருந்து இவ்வாறு மீட்கப்பட்டது.
இவர் கடந்த மூன்று வருடகாலமாக உளநலப் பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் இரு வாரங்களுக்கு ஒருமுறை சிகிச்சை பெற்று வந்தவர் என்று உறவினர்கள் விசாரணையில் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.
சடலம் உடற்கூறாய்வுக்காக கரடியனாறு பிரதேச சைத்தியசாலைக்கு கொண்டு விரப்பட்டு பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Post Top Ad
Wednesday, June 20, 2018
உளநலப் பாதிப்புக்குள்ளானவரின் சடலம் மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.