Breaking

Post Top Ad

Thursday, June 21, 2018

விவசாயத்துக்கான நீரை கொண்டுவரும் செயற்றிட்டம்

மொரக்கஹாகந்த நீர்த்தேக்கத்தில் இருந்து, தம்பலகாமம் பிரதேசத்திலுள்ள குளங்களுக்கு, விவசாயத்துக்கான நீரைக் கொண்டுவரும் செயற்றிட்டம் தொடர்பான ஆரம்பக் கூட்டம், தம்பலகாமம் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச சபை உபதவிசாளர், உறுப்பினர்கள், மதகுருமார்கள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாய உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நீர்த்தேக்கத்திலிருந்து, தம்பலகாமத்தில் உள்ள 9 குளங்களுக்கு நீரைக் கொண்டுவருவது தொடர்பாக, நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதோடு, இது தொடர்பான பணிகளைச் செய்வதற்கான அதிகாரிகள் குழுவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages