மட்டக்களப்பு கல்லடி – கல்முனை பிரதான வீதியில் வாகன
விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி – கல்முனை பிரதான வீதியின் கல்லடி பகுதியில் இன்று
காலை மட்டக்களப்பு நகரில் இருந்து கல்முனை நகரை நோக்கி பயணித்த இரு
வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக
காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்
இன்று காலை இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் வாகனத்தை செலுத்திய சாரதிக்கும் வாகனத்தில் பயணித்தவர்களுக்கும் எதுவித
காயங்களும் ஏற்படவில்லை என
பொலிசார் தெரித்தனர்
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி வாகன போக்குவரத்து பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.