Breaking

Post Top Ad

Tuesday, June 19, 2018

மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டி என்பனவற்றிற்கான புதிய பெற்றோல் வகை அறிமுகம்

முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பனவற்றிற்கான புதிய பெற்றோல் வகை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட பொறியியலாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்

இது தொடர்பான பரிசோதனை வெற்றிகரமானமுறையில் இடம்பெறுவதாகவும் அமைச்சர் கூறினார்.

விருப்பமின்றியே பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டதாகவும், பெற்றோல் விலை அதிகரிப்பினால்பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தாம் நன்கு உணர்ந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.


இதனைக் கருத்திற் கொண்டு மாற்று வழிகளின் ஊடாக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றிகவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க வலியுறுத்தினார்.



மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டி என்பனவற்றிற்கான புதிய பெற்றோல் வகை அறிமுகம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages