Breaking

Post Top Ad

Tuesday, June 19, 2018

மட்டக்களப்பில் இலத்திரனியல் நூலகம் திறப்பு

மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள  புதுமண்டபத்தடி கிராமத்தில் இலத்திரனியல் நூலகம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி நிசாந்தி அருள்மொழி,   புதுமண்டபத்தடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை  அதிபர்   அ.போசராசா,  புது மண்டபத்தடி கிராமசேவகர் க.கிருஷ்ணப்பிள்ளை,
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்  சு.வசந்தகுமார்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


திட்ட முகாமைத்துவ இளைஞர் விவகார தெற்கு அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடு பூராகவும் முன்னெடுத்து வரும் 35 இலத்திரணியல் நூலகம் அமைத்தல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தினால்  இந் நூலகம் கையளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages