மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாநகர சபையினால் நகர அபிவிருத்திக்காக நிதிகள் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி அபிவிருத்தி புனர்நிர்மானம் மற்றும் மாநகரை முதன்மை படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இதற்கு அமைய மட்டக்களப்பு மாநகர முதல்வரின் பணிப்புரைக்கு அமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி வீதி காபட் இடப்பட்டு அவ்வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது
கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 8 மில்லியன் ரூபா நிதியில் கீழ் குறித்த வீதிக்கான காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டது
இந்நிகழ்வில் அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் வை.தர்மரெட்ணம், மட்டக்களப்பு மாவட்டப் பிரதம பொறியியலாளர் எம்.பத்மராஜா, நிறைவேற்றுப் பொறியியலாளர் என்.சசிநந்தன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.பைசல் ஆகியோர் கலந்து கொண்டு கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.