இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை புளியந்தீவு தெற்கு வட்டார உறுப்பினர் அ.கிருரஜன், மண்முனை வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர், மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர், எழுகதிர் அமைப்பின் உறுப்பினர் லக்ஸ்மன், புளியந்தீவு தெற்கு சனசமூக நிலைய நிருவாகத்தினர் உட்பட கழக அங்கத்தவர்கள், ஆலோசகர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பொங்கள் பூசை, மற்றும் கலாசார விளையாட்டுக்கள், இளைஞர் யுவதிகளின் நடனங்கள் என்பன இடம்பெற்றதுடன் விசேட நிகழ்வாக மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் எழுகதிர் அமைப்பின் உறுப்பினர் லக்ஸ்மன் அவர்களினால் கழகத்திடம் கையளிக்கப்பட்ட அப்பியாசப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.