கைத்தொலைபேசியில் ஆபாச படங்கள் மற்றும் கெட்ட வார்த்தைகளை பகிர்ந்து கொண்ட மாணவிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குருனாகலில் பதிவாகியுள்ளது.
கைத்தொலைபேசியில் ஆபாச படங்களை பரிமாறிக் கொண்டதால் மோதிக் கொண்ட மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்தும், பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையிலும் இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த மாணவிகள் குருணாகல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
வெஹர மற்றும் கெட்டுவான என்னும் பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 21 வயதான மாணவிகளே இந்தச் செயலைச் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.